ஒட்டாமல் உறவாடி ..




ஜென்ம ஜென்மமாய்
உன்னோடு நான் வாழ்கிறேன் 
உன்னை ஒட்டி கொண்டும்
உன்னை உரசி கொண்டும்
ஆனால்  நீயோ ...
என்னோடு ...
பட்டும் படாமலும்
என்னை தொட்டும் தொடாமலும்
என்னை ஏன் தள்ளி வைத்து பார்க்கிறாய்
அடுத்த ஜென்மத்திலாவது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒன்றாக வேண்டும் என் அன்பே ...
(தாமரை இலை....தண்ணீரை பார்த்து)........
 ~ உங்கள் யசோதா ~

1 Response
  1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/dh-ch.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..